தாய்ப்பாலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பதை அனைவருமே அறிந்ததே.

குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம் எல்லாமே இதனை சார்ந்துதான் இருக்கிறது. இவ்வளவு மகத்துவமான தாய்ப்பாலில் பல அழகு குறிப்புகள் ரகசியம்போல ஒளிந்திருகிறது. அவை என்ன என்ன என்பதை பார்ப்போம்.

குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம் எல்லாமே இதனை சார்ந்துதான் இருக்கிறது. இவ்வளவு மகத்துவமான தாய்ப்பாலில் பல அழகு குறிப்புகள் ரகசியம்போல ஒளிந்திருகிறது. அவை என்ன என்ன என்பதை பார்ப்போம்.
- தாய்ப்பாலை காட்டன் துணியால் முகத்தில் ஏற்பட்ட வீக்கம் உள்ள இடத்தில் தடவினால் விரைவில் வீக்கம் குறையும். கருவளையங்களையும் காணாமல் போக செய்யும்.
- தினமும் ஒரு சிறிய காட்டன் துண்டை தாய்ப்பாலில் நனைத்து கொண்டு அதனை முகத்தில் 10 நிமிடம் ஒத்தடம் கொடுத்து பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். மங்கிப்போன உங்கள் முகம் மிகவும் பொலிவுடன் மாறிவிடும்.
- வறண்டு போன உதடுகளில் தாய் பாலால் ஒத்தடம் கொடுத்தால் ஈர்ப்பதுடன் எப்போதும் இருக்கும். மேலும் உதடுகள் வெடிப்பு வந்து புண் ஆவதை தடுக்கும்.
- 1 டீஸ்பூன் ஓட்ஸ் மாவு, சிறிது தேன் மற்றும் சிறிதளவு தாய்ப்பால் ஆகியவற்றை எடுத்து நன்கு கலக்கவும். சிறிது நேரம் குளிர வைத்து பின்பு முகத்தில் 15 நிமிடம் பூசி, காட்டன் துணியால் நீரில் நனைத்து துடைத்து விடவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்தால் சொரசொரப்பான வறண்ட சருமம் மொழு மொழுவென மாறும்.
- சிறிது முல்தானி மட்டியை எடுத்து கொன்டு அதனுடன் தாய்ப்பாலை சேர்த்து கலக்கவும். பிறகு இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்தின் 15 நிமிடம் போட்டு கழுவவும். இது முகத்திற்கு அதிக மினுமினுப்பை தந்து அழகூட்டும்.
- தாய்ப்பாலை சிறிது தேனுடன் கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். அதன்பிறகு 15 நிமிடம் முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் சருமம் சுத்தமடைந்து கரும்புள்ளிகள் நீங்கும்.
- தாய்ப்பாலை சிறிது எடுத்து முகத்தில் பூசினால் சூடு கட்டிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.